அந்த ஆலமரத்தின் நிழலில்
எங்களை இளைப்பாற அனுமதிக்காமல் இருந்திருக்கலாம்
ஆனால் அந்த ஆலமரத்தின்
வேர்கள் அந்த சுவற்றையும் தானடி
எங்கள் வீடுகளின் அடியில்
நாங்கள் சுவாசித்த காற்று அந்த சுவற்றையும் தாண்டி
உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள்
உங்களுக்கு உயிர் கொடுத்து கொண்டிருக்கிறது
உங்கள் தோட்டங்களில்
பயிர் வளர்த்ததற்கு பதிலாக
உங்கள் மனங்களில்
தீண்டாமையை உரம் போட்டு வளர்க்கிறீர்கள்
நாளை அறுவடை செய்யப் போவதும் அதுவேதான்
No comments:
Post a Comment