Tuesday, October 26, 2010

அறுவடை

அந்த ஆலமரத்தின் நிழலில்

எங்களை இளைப்பாற அனுமதிக்காமல் இருந்திருக்கலாம்

ஆனால் அந்த ஆலமரத்தின்

வேர்கள் அந்த சுவற்றையும் தானடி

எங்கள் வீடுகளின் அடியில்

நாங்கள் சுவாசித்த காற்று அந்த சுவற்றையும் தாண்டி

உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள்

உங்களுக்கு உயிர் கொடுத்து கொண்டிருக்கிறது

உங்கள் தோட்டங்களில்

பயிர் வளர்த்ததற்கு பதிலாக

உங்கள் மனங்களில்

தீண்டாமையை உரம் போட்டு வளர்க்கிறீர்கள்

நாளை அறுவடை செய்யப் போவதும் அதுவேதான்

Tuesday, October 5, 2010

இருளியல்

இரவு மனிதனின் இன்னொரு முகத்தைக் வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது
மனிதனுக்கு இருள் இன்னொரு அருள் தரும் தெய்வம் தான்
இருட்டு மனிதனுக்கு நிம்மதியையும் அமைதியையும் தரும் என நினைக்கிறான்
அதோடு பயமும் பற்றிக்கொள்கிறது



Thursday, August 26, 2010

சுவரியல்

சுவரை வைத்து அரசியலா?
இல்லை இல்லை
சுவர் வைத்து
எங்களை சிறைவைத்த அரசியல்
உத்தபுரம் சுவரும்
இன்னொரு
சிறைசாலைச சுவர் தான்

உயர் சாதி எனில்
உச்ச நீதியும் சாயும்
தாழ் சாதி எனில்
மிச்ச நீதியும் பாயும்
லத்திகள் என்ன
பாயாமலயிருக்கும்

கோமான்கள் அமர்ந்து
கோலோச்சிய பீடங்களில் எப்போதும்
இழி சாதியினரின் பலியிட்ட
ரத்தம் தான் வழியும் .

தீண்டாமைச் சுவர்
உத்தபுரத்தில் மட்டுமா இருக்கிறது
உங்கள் மனங்களிலும் தான்

Sunday, August 22, 2010

மலரியல்

உன்

திங்கள் பார்வை

என்னுள் அல்லியாய்

பூக்கவைக்கிறது

காதல்

நீ

இருக்கும் வரை

அது வாடாத மலராய்

அது இருக்கும்

ரணவியல்

உன்

பார்வை அம்புகள்

என்னுள் ரணமாக்குகிறது

கோபத்தில் மட்டுமல்ல

சாந்தமாய் பார்க்கும்போதும்

மௌனவியல்

எவ்வளவு பேசியும் முடியவில்லை

இனி உன் மௌனத்தை

எந்த சம்மட்டியால்

உடைக்க முடியும்

என

எனக்கு தெரியவில்லை