Thursday, August 26, 2010

சுவரியல்

சுவரை வைத்து அரசியலா?
இல்லை இல்லை
சுவர் வைத்து
எங்களை சிறைவைத்த அரசியல்
உத்தபுரம் சுவரும்
இன்னொரு
சிறைசாலைச சுவர் தான்

உயர் சாதி எனில்
உச்ச நீதியும் சாயும்
தாழ் சாதி எனில்
மிச்ச நீதியும் பாயும்
லத்திகள் என்ன
பாயாமலயிருக்கும்

கோமான்கள் அமர்ந்து
கோலோச்சிய பீடங்களில் எப்போதும்
இழி சாதியினரின் பலியிட்ட
ரத்தம் தான் வழியும் .

தீண்டாமைச் சுவர்
உத்தபுரத்தில் மட்டுமா இருக்கிறது
உங்கள் மனங்களிலும் தான்

Sunday, August 22, 2010

மலரியல்

உன்

திங்கள் பார்வை

என்னுள் அல்லியாய்

பூக்கவைக்கிறது

காதல்

நீ

இருக்கும் வரை

அது வாடாத மலராய்

அது இருக்கும்

ரணவியல்

உன்

பார்வை அம்புகள்

என்னுள் ரணமாக்குகிறது

கோபத்தில் மட்டுமல்ல

சாந்தமாய் பார்க்கும்போதும்

மௌனவியல்

எவ்வளவு பேசியும் முடியவில்லை

இனி உன் மௌனத்தை

எந்த சம்மட்டியால்

உடைக்க முடியும்

என

எனக்கு தெரியவில்லை

காதலியல்

தயவுசெய்து கண் சிமிட்டாதே

மின்னல் வெட்டுவது போலுள்ளது

அருகில் அமரு என

கரம் பிடித்து

இழுத்து இருக்கையில்

அமர்த்தினாய்

சந்திரமண்டலத்தில்

கால் வைத்தது போலிருந்ததது

அகத்தின் அழகு முகத்தில்

என்றான் கவிஞன்

உன் அகத்தில் என்ன உள்ளதென

எனக்கும் தெரியவில்லை

என் அகத்தில் உள்ள காதலும்

உனக்கும் தெரியவில்லை

Thursday, August 19, 2010

தலித்தியல்

ஆலயங்களுக்கு வெளியே
கழட்டிவிடப்படுகின்றன
செருப்புகளும் தலித்துகளும்

மாட்டு மூத்திரத்திற்கு
தரும் மரியாதை கூட
தலித்துக்களுக்குத் தருவதில்லை

வடம் பிடித்து இழுத்தாலும்
சேரிப்பக்கம் வராத சாமிய
என்ன மயித்துக்கு இழுக்கணும்

இந்தியா தீபகற்ப்பமல்ல
நான்கு வர்ணங்களால் சூழப்பட்ட
தீவு

தேயிலையின் ரத்தம்

தேயிலை தோட்டங்களில்
வேலை செய்த தலித் தொழிலாளர்களின்
உயிரையும்
உறிஞ்சிக் குடித்த
மேல்குடி அட்டைகள்
விற்ற தேயிலையில்
வடிந்த தேநீரில்
கொஞ்சம் கொஞ்சமாக
நிறம் மாறும்
எங்கள் கருப்பு தலித்துகளின்
சிவப்பு ரத்தம்

சருகின் நினைவு

தாமிரபரணி ஆற்றில்
தூவும் அஞ்சலிப்பூக்கள்
சருகனாலும்
இருபத்தேழு உயிர்களின்
நினைவை சுமந்து செல்லும்
எப்போதும்