Thursday, August 19, 2010

தலித்தியல்

ஆலயங்களுக்கு வெளியே
கழட்டிவிடப்படுகின்றன
செருப்புகளும் தலித்துகளும்

மாட்டு மூத்திரத்திற்கு
தரும் மரியாதை கூட
தலித்துக்களுக்குத் தருவதில்லை

வடம் பிடித்து இழுத்தாலும்
சேரிப்பக்கம் வராத சாமிய
என்ன மயித்துக்கு இழுக்கணும்

இந்தியா தீபகற்ப்பமல்ல
நான்கு வர்ணங்களால் சூழப்பட்ட
தீவு

No comments:

Post a Comment